லக்னோ பாஜக ஆளும் உத் தரப்பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் மாவட் டத்தில் உள்ளது ராஸ்கவன் டி.எல். பப்ளிக் என்ற தனியார் பள்ளி. இந்த பள்ளியில் விடுதி யில் தங்கி பயின்று வரும் 2ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறு வன் கடந்த வாரம் காணாமல் போனான். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹாத்ரஸ் போலீஸ் அதிகாரி ஹிமான்ஷு மாத்தூர் தலை மையில் போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின் ராஸ்கவன் தனியார் பள்ளி யின் இயக்குநரான தினேஷ் பாகேலின் கார் டிக்கியில் இருந்து காணாமல்போன சிறு வன் சடலமாக மீட்கப்பட்டான். தொடர் விசாரணையின் முடி வில் பள்ளியின் முன்னேற்றத்தி ற்காக 7 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு 3 ஆசிரியர்கள் உத வினர் எனவும் தினேஷ் பாகேல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தினேஷ் பாகேல் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உயிர் தப்பிய மாணவி
கடந்த செப். 6 அன்றே நரபலி கொடுக்க 10 வயது சிறு மியை பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகேல் கடத்தியுள் ளார். ஆனால் அவரிட மிருந்து சிறுமி தப்பிவிட்டார். இதனையடுத்து 7 வயது சிறு வனை நரபலி கொடுத்துள்ள னர் என ஹாத்ரஸ் போலீஸ் அதி காரி ஹிமான்ஷு மாத்தூர் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்கள் டாப்
நாட்டின் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவில்,”இந்தியாவில் கடந்த 2014 முதல் 2021 வரை 8 ஆண்டுகளில் 103 பேர் நரபலிக்கு பலியாகியுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. இந்த நரபலி மரணங்கள் பெருபாலானவை பாஜக ஆளும் மாநிலங்களிலேயே நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.